திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றபோது ஊழியர்கள் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். திருவெறும்பூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கிப்பிடித்தனர்.




