மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (பிப்.12) நாடு முழுவதும் சுமார் 30 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் தொழிலாளர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வங்கி, மின்சாரம், காப்பீடு மற்றும் போக்குவரத்து துறையினர் இதில் ஈடுபடுவதால் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதால், முக்கிய துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




