ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள குசும்பா கிராமத்தில் நரபலி சடங்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 13 வயது சிறுமியை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார், சிறுமியின் 35 வயது தாயார், ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆண் என மூவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




