இரத்த மூலத்திற்கு தீர்வு தரும் பிரண்டை..!!

Oplus_131072

இரத்த மூலத்திற்கு….
இரத்த மூலத்திற்கு பிரண்டை கை கண்ட மருந்து. பிரண்டையை நறுக்கி நெய் விட்டு வதக்கி அரைத்து கோலி குண்டளவு காலை மாலை சாப்பிட்டு வர குணம் தெரியும்..

மூலக்கடுப்பு குணமாக மாதுளம் பூச்சாற்றில் அதிமதுரத்தை அரைத்து சுண்டைக்காயளவு பாலில் சாப்பிட்டு வரலாம்…

மூலம், பௌத்திர நோய் ஏற்பட்டால் குப்பைமேனி சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதன் அளவில் நாலில் ஒரு பங்கு திப்பி வியை வறுத்துச் சூரணம் செய்து சேர்த்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு காலையும் மாலையும் பாலுடன் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர குணமடையும்…

உள் மூலம், இரத்த மூலம் நீங்க முட்காவேளை இலை, துத்தி இலை. பொடுதலங்காய் இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து காலை, மாலை கச்சக்காயளவு எருமைத் தயிரில் சாப்பிட்டு வர குணமாகும். பொடுதலங்காய் கிடைக்காவிடில் அதற்கு பதிலாக பச்சை அருகம்புல் சேர்த்துக் கொள்ளலாம்….

Read Previous

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி..??

Read Next

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்..!! போக்சோ சட்டத்தில் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular