திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மே 22)
ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த சேவை தடைபடும். இதனால் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.




