“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

 

 

இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் 7.5 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

Read Previous

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!

Read Next

கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular