நாட்டின் பொதுமக்கள் தங்களின் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் திரையரங்குகளில் பொழுதை கழித்து வருவதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
மக்களின் துயரங்களை அரசு கவனிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தான் காய்ச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க விரைவில் நேரடியாக போராட்ட களத்திற்கு செல்ல இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.




