தேசத்தைக் காக்கும் பணியில் வீரமரணம்.. அக்னி வீரர் நந்தாவுக்கு முழு ராணுவ மரியாதை..!!

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான அக்னி வீரர் நந்தா, லடாக்கில் இந்திய–சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த வீரர் நந்தாவின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும்.

Read Previous

விராலிமலையில் மீண்டும் களம் காண்கிறாரா விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்?..

Read Next

₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular