தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை 2.0-வை உருவாக்கும் பணியில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளார். முதல் முறையாக ‘லிங்க்ட்இன்’ சமூக வலைதளத்தின் மூலம் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களிடம் நேரடியாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த முயற்சி, தொழில்துறையின் தேவைகளை நேரடியாக அறிந்து செயல்திறன் மிக்க கொள்கையை உருவாக்கவும், தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை நோக்கி முன்னேறவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.




