கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த கூடுதல் கடன் தள்ளுபடி காரணமாக அரசுக்கு ரூ.953 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் விளக்கமளித்தார்.




