தமிழகத்தில் மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான பதிலுரையில் பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் திமுக ஆட்சியில் 3 கிணறுகளுக்கும், அதிமுக ஆட்சியில் ஒரு கிணற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவற்றில் தற்போது 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
மேலும், மீன்வளம் மற்றும் மீனவர்களின் நலனை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டம் வந்தாலும், தவெக அரசு அதற்கு அனுமதி வழங்காது என அமைச்சர் ராஜீவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.




