தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் பருமன்! 10 ஆண்டுகளில் உயிரிழப்புகள் 80% ஆகுமா?

 

 

தமிழகத்தில் மாறிவரும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் துரித உணவுகளின் அதிகரித்த பயன்பாடு காரணமாக உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்களின் பாதிப்பு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 44.2% பெண்களும், 38.8% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மக்கள் தங்களது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 80% வரை அதிகரிக்கக்கூடும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.

 

ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் முறையான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தொற்றா நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை!

Read Next

“KYC அப்டேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!” போலி SMS-களை நம்பாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular