மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது எனக் காட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், மேகமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு மேகமலை வனப்பகுதி பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




