குறுவை சாகுபடிக்காக அறிவிக்கப்பட்ட தொகுப்பு திட்டம் 70 நாட்களாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நடவு காலத்திலேயே வழங்க வேண்டிய உதவித்தொகுப்பு தாமதமாகி வருவது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், இன்னும் 10 நாட்களில் நெல் கொள்முதல் தொடங்க உள்ள நிலையில், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




