மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 24வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரும் அக்டோபர் மாதத்தில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த தவணைத் தொகையைப் பெற தகுதியான விவசாயிகள், திட்டத்தில் தேவையான 3 முக்கிய நடைமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, PM-KISAN இணையதளத்தில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்வதன் மூலம், அடுத்த தவணைத் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.




