திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியதில், அதில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கிருஷ்ணா (36), விஷ்ணு (25) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




