தஞ்சாவூர் ஸ்டைலில் நெருப்பில் வைத்து சுட்ட தக்காளி சட்டினி எப்படி செய்வது என்று பார்ப்போம்….
தேவையான பொருட்கள் எண்ணெய், பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, புளி, உப்பு, கடுகு கருவேப்பிலை…
செய்முறை..
ஒரு குச்சியில் தேவையான தக்காளியை குத்தி நெருப்பில் வாட்டி மேல் உள்ள தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும், பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிது புளி உப்பு போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி தொக்கை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும், சூடான தோசை இப்லுடன் இதை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும் இதுதான் தஞ்சாவூர் ஸ்டைலில் நெருப்பில் சுட்ட தக்காளி சட்னி சுவைத்து பாருங்கள் இன்னும் சுவைக்க தோணும்…!!!




