குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க வசம்பு இலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்க நோய் வராமல் தடுக்கலாம். மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இரண்டு வேலைக்கு கொடுக்க பூச்சி அகலும். குழந்தைகளின் கண் நோய் குணமாக காஞ்சிர மஞ்சள் பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும். பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால் சரியாக்க மார்பில் விளக்கெண்ணையை தடவி உலர்ந்த மாதுளம் விதைகளை பொடி செய்து அதன் மீது வைத்து கட்டி வரவேண்டும் 21 தினங்கள் செய்தால் மார்பகங்கள் கட்டு பெறும்.
கவர்ச்சியான தோற்றம் தரும். கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சிறந்த பழம் மாம்பழம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனை ஆலோசித்து சாப்பிடுவது நல்லது.



