ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய..!! இந்தப் பதிவை படிங்க..!!

Oplus_131072

ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய…!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்
ட்ரை ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2/3 கப்
செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்.

நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் தயார். அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி சூடாக பரிமாறலாம்.

 

Read Previous

சிக்கன் சமோசா செய்வது எப்படி..??

Read Next

செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular