உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 100 கிராம்
கருப்பு பருத்தி விதை – 50 கிராம்
தேங்காய் மூடி – 1
தேங்காய் துருவல் – விருப்பத்திற்கு ஏற்ப
ஏலக்காய் – 3
முந்திரி – சிறிதளவு
சுக்கு – சிறிதளவு
கருப்பட்டி – 1 வட்டு (பெரியது)

செய்முறை :

6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.

பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.

கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.

தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.

Read Previous

தேவர்கள் சொன்ன இரகசிய மருந்து..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?? இருக்கே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular