கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

 

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கொடூரச் சம்பவம் ஏர்வாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கொடைக்கானலில் பரபரப்பு: மனைவி உயிரிழந்த துயரத்தில் ஏரியில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு..!!

Read Next

திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular