சென்னை பெரம்பூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி, பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் விஜயின் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வேதாந்தா முருகப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.




