இந்த நவீன காலகட்டத்தில் பணம் இருப்பவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது பணம் இருக்காதவர்களுக்கு பணத்தால் கஷ்டம் இருக்கிறது என்பதுதான் முக்கியமான உண்மை. வசதியாக இருப்பவர்களுக்கும் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சரி கஷ்டங்கள் இருக்கிறது. கஷ்டங்களை எதிர்கொள்ளாத மனிதன் என்று யாருமே இந்த உலகத்தில் இல்லை. பணம் இருப்பவர்களுக்கு நோய், மற்றும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை, பிள்ளைகள் தன் பேச்சை கேட்காமல் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் பணமிருந்தும் நிம்மதி இல்லை என்று பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பணம் இல்லாதவர்களுக்கு கடன் பிரச்சனை என்று கஷ்டம் என்பது மனிதனுக்கு பல வழிகளில் வருகிறது. இதனால் இரவில் தூக்கம் இல்லாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் கஷ்டத்தால் தற்கொலை செய்யும் அளவுக்கு துணிகின்றனர். இந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி மன நிம்மதியை பெற இரவில் இதை மட்டும் செய்யுங்க போதும். அது என்ன என்பதை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.
நம் கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு துண்டு வெல்லத்தை வீட்டின் நிலை வாசலில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். காலையில் எந்திரித்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளம் அப்படியே இருந்தால் நமக்கு கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், அந்த வெள்ளத்தை எறும்புகள் சாப்பிட்டுவிட்டு அந்த வெள்ளம் இருந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் நாம் கஷ்டம் தீர்ந்து நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். இதைத்தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க. இப்படி செய்தால் நம் வீட்டில் கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிலைக்கும்.




