அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து வேண்டும் என டென்மார்க்கை வலியுறுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆனால், நேட்டோ பொதுச்செயலாளருடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் வருங்கால ஒப்பந்தம் ஏற்படுத்த கட்டமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.




