சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அயனாவரம் பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகச் சுரேஷ் என்பவரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முதல் அதிரடி நடவடிக்கை இதுவாகும்.




