மனைவியின் உயிரைக் காப்பாற்றுமாறு நடிகர் முத்துக்காளை விடுத்த உருக்கமான கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளச் செய்த முதல்வர், தேவையான உதவிகளை உறுதி செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, முத்துக்காளையின் மனைவியின் உடல்நலம் குறித்து விசாரித்து, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.




