முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம் மூலம் ரூ.10,000 வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடத்தி, பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கைத்தடி, கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள், பல்செட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க ரூ.10,000 வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.




