முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்ட பதிவில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எவ்வளவு மரியாதை இருந்தாலும், தனது வாயால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்” என சாடியுள்ளார்.




