ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுகவை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி” என குறிப்பிட்டுள்ளார்.




