பஞ்சு போன்ற இட்லிக்கு, மாவு அரைப்பது எப்படி..??

Oplus_131072

-முதலில் இட்லிக்கு என்று அரைக்கும் மாவில் வெந்தயம் சேர்க்காமல் இருந்தால் நன்கு இட்லி வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

-எந்த அரிசி என்றாலும் 4 டம்ளர் அரிசிக்கு, ஒரு டம்ளர் முழு உளுந்து சேர்த்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.

-மேலும் இட்லிக்கு அரிசி அரைக்கும் பொழுது மிகவும் நைசாக அரைக்காமல், சற்று கொறகொறவென்று அரைத்தால் இட்லி மிகவும் பஞ்சு போன்று இருக்கும்.

-இட்லி கொப்பரையில் இட்லி மாவை ஊற்றி 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்தால், இட்லி சாப்டாக இருக்கும். அதிக நேரம் இட்லியை வேக வைக்கக்கூடாது.

– இட்லியை வேக வைக்கும் முன்னர், இட்லி கொப்பரையில் உள்ள தண்ணீரில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு, இட்லி மாவை வேக வைத்தால் இட்லி நல்ல நறுமணத்துடனும், வெள்ளையாகவும், பஞ்சு போன்றும் இருக்கும். மேலும் இட்லி எளிதில் காய்ந்து போகாமல் இருக்கும்.

-இட்லி தட்டில் போடும் துணியானது பனியன் துணியாக இருந்தால் இட்லி எடுக்கும்போது இட்லி துணியில் ஒட்டாமல், அழகாக பந்து போன்று வரும்.

Read Previous

தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular