பிரசவத்திற்கு பின் பெருத்த வயிறு ஆகாமல் இருக்க கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..??
இந்த நவீன காலகட்டத்தில் பல மருத்துவ குறிப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என பல இருந்தாலும். சில நேரங்களில் பாட்டி வைத்தியமும் நமக்கு கை கொடுக்கும். அந்த மாதிரி தான் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பல வைத்தியங்கள் பல நோய்களுக்கு பாட்டிகள் செய்வார்கள். அந்த வகையில் அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை பிரசவத்தில் பாட்டி வைத்தியம் ஒன்று இருக்கிறது அது என்னவென்றால். பிரசவத்திற்கு பிறகு வயிறு பெரிதாகாமல் இருக்க. இதைதான் நம் வீட்டில் இருக்கும் பாட்டி செய்வார்கள். பிரசவத்திற்குப் பிறகு வயிறு விட்டு போயி வீங்கின மாதிரி ஆயிடும். மற்றும் வயிறு சற்று இறங்கியும் போகும். அப்படி வயிறு இறங்காமல் இருக்க வயிற்றை காட்டன் துணியால் இருக்க கட்டிக்கணும். பிரசவத்திற்கு பிறகு இதை செய்யலாம். ஆப்ரேஷன் செய்யும் தாய்மார்கள் டாக்டரை ஆலோசனை செய்து இதை செய்ய வேண்டும். ஆனால் சுகப்பிரசவம் நா குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் இருந்தே இதை செய்ய தொடங்கலாம். தொப்புல்ல தொடங்கி துண்டை பட்டையா வைத்து கட்டலாம். இப்படி செய்யறதால வயிறு இருக்கிறதோட மட்டுமல்லாமல் டெலிவரி கழிவுகள் வெளியேறவும் செய்யும். இந்த நேரத்துல எள்ளுருண்டை மற்றும் பிரசவ லேகியம் சேர்த்து சாப்பிட அது கருப்பை கழிவு நல்லா அகற்றி விடும்.




