மதுரை செல்லூரைச் சேர்ந்த 19 வயது மாணவி கலையரசி, உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, நாட்டு மருந்துக் கடையில் மருந்து வாங்கி உட்கொண்டார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது என்றும் போலீசார் தெரிவித்தனர்.




