தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3000 பரிசுத்தொகை, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 34,000 ரேஷன் கடைகள் மூலம் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்பட்டது. இதுவரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள் வரும் 20ஆம் தேதி ரேஷன் கடைகளில் பரிசுத்தொகை மற்றும் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் பரிசு சென்றடையவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




