17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முருகன் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

மேலும், அவருக்கு ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 20) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறார் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

Read Previous

சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

Read Next

மார்க்கண்டேயன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular