டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு மனைவியுடன் அந்தமானுக்கு தேனிலவு சென்றபோது, அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தாக்கியதாகவும், கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தியதுடன், அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், கோரக்பூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




