தமிழகத்தில் உள்ள 2.28 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.1,000 அரசு செலவிடும் நிலையில், சுமார் 20 லட்சம் பேர் பொருட்களை வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பொங்கல் பரிசு போன்ற சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதால், முறைகேடுகளைத் தவிர்க்க தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே ரேஷன் திட்டத்தில் நீடிக்கச் செய்யத் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




