விருதுநகர் சங்கரலிங்காபுரம் அருகே முத்துமாணிக்கம் (52) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், கடந்த 19ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை மற்றும் விசாரணை முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




