தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, அரசு நிதி ஒதுக்காததால் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த மாதத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால், வாகன வாடகை, பணியாளர் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் முதல் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் கூறப்படுகிறது.




