லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

 

 

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நபடிஹா மாவட்டத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே, ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை! 24 லட்சம் பேர் பாதிப்பு!

Read Next

காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் செய்யும் முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular