திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!
ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில், திருமணம் நடைபெற இருந்த நாளில் மணப்பெண் திடீரென மண்டபத்திற்கு வராமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக மாப்பிள்ளை குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.




