அசாமில் கனமழை, வெள்ளப் பெருக்கு: 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உயர்ந்துள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.




