பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதல்: 23 பேர் பலி..!!
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய குர்ரம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலின் பேரில் பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.




