16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘இரும்பு கண்மணி திட்டம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.




