ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ரத்தக் காயங்களுடன் கிடந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.




