தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) தூங்கிக் கொண்டிருந்தபோது




