கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!
கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் 54 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. விதிமீறல் நியமனங்கள் குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் சென்றது.




