அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.




