யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்கு மறுஆய்வு ஏன்?.. நீதிமன்றம் கேள்வி..!!
ஒரு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய பின் ஏன் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். விஜய்யின் “ஜன நாயகன்“ படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாக தணிக்கை வாரியத் தரப்பு கூறியது.




